லன்டனில் வாழும் தமிழ் பேசும் இந்திய இலங்கை மக்களால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு ஈஸ்ட் ஹேம்; தவ்வா நிலையம் (East Ham Dawwa Centre-London UK) ஆரம்பிக்கப்பட்டது. இதனுடய ஆரம்ப நிலைபாடு குர்ஆன் ஸூன்னாவுக்குட்பட்டதாக இருந்தது. காலப் போக்கில் இந்த நிலை மாறி அகீதாவில் முரண்பாடுள்ள இயக்கங்களின் ஆதிக்கம் மேலோங்கப்பட்டு சமரச தவ்வா நிலையமாக உருவமெடுத்துள்ளது. இதற்கான காரணம் இதில் இருக்கக் கூடிய முக்கிய பதவி வகிப்பவர்கள் குர்ஆன் சுன்னா போர்வைக்குள் இருக்கும் Fake Dawwa - ஜமாஅத்தே இஸ்லாமி கொள்கையை சார்ந்தவர்கள்.
இவர்கள் நாங்களும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் தான் தவ்வா செய்கிறோம் என்பதை காட்டிக்கொள்வதற்கு குர்ஆன் சுன்னாவை கொள்கையாக கொண்ட மௌலவிமார்களை இலங்கையில் இருந்து அழைத்து வந்து அவர்களை கொண்டு மார்க்க செற்பொழிவுகள் நிகழ்த்த வைக்கிறார்கள.; இவர்களும் ஒரு சில உலக லாபங்களுக்காக அவர்களுடய பிழைகளை அவ்விடத்தில் சுட்டிக் காட்டாது பூசி
மொழுகிவிட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு உதாரணம் எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாக சொற்ப தொகையைப் பெற்றுக் கொள்கின்றனறோ அவர்கள் நிச்சயமாக தங்கள்
வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள்.அன்றி மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்); பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புருத்தும் வேதனைதான் உண்டு.
இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் மன்னிப்புக்கு பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். (நரக)ரெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவே?
நபிவழிக்கு முற்றிலும் மாற்றமான இத்தகைய சமரச தவ்வா செய்வதால்
தான் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அழைப்புப் பணி நிலையம் இன்று அதற்கு முற்றிலும் மாற்றமான கொள்கையாளர்களின் கைப்பிடிக்குள் சிக்கிவிட்டது. தற்போதுள்ள நிலமையில் இந்த நிலையத்தால் ஏற்பாடு செய்யப்படும் தவ்வா நிகழ்ச்சிகளில் அவர்களோடு சமரசம் செய்து குர்ஆன் சுன்னா கொள்கையில் உள்ள மௌலவிமார்களும் மார்க்க உரைகள் நிகழ்த்தும் போது குர்ஆன் சுன்னா மௌலவிமார்கள் ஜமாத்தே இஸ்லாமியின்
கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். மக்களையும் ஜமாத்தே
இஸ்லாமியின் கொள்கைகள் சரியாகத்தானே இருக்கும் அதனால் தானே குர்ஆன் சுன்னாவில் உள்ள மௌலவிமார்களே அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளார்களே என்று எண்ணச் செய்து வழிதவறச் செய்து விடும். மேல்கொண்டும் இதே நிலைமையை நீடிக்காமல் அந்த நிலையத்தை குர்ஆன் சுன்னாவின் கீழ் கொண்டு வருவதற்கு தௌஹீத் மௌலவி மார்கள் அவர்கள் ஜமாத்தே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து
விடுபடும் வரை எந்த பங்களிப்பும் செய்யாதிருப்பதே சிறந்தது. அப்படியும்
அவர்கள் விடுபடாதவிடத்து அந்த நிலையத்தை Fake Dawwa - ஜமாத்தே இஸ்லாமி நிலையமாக முத்திரை இடவேண்டும். இங்கிலாந்திலும் இலங்கையிலும் குர்ஆன் சுன்னாவில் உள்ள அமைப்புகள் எவரும் இந்த நிலையம் ஜமாத்தே இஸ்லாமியின் பிடியிலிருந்து விடுபடும்வரை இவர்களது எந்தவொரு விடயத்திலும் பங்கு கொள்ளாது தவிர்ந்து விட வேண்டும். (SLMoor)
Home Sri Lanka Think Tank-UK (Main Link)